Header Ads



ஜெனீவா செல்கிறார் முஜிபுர் ரஹ்மான், காவிந்தவும் இணைவு


(எஸ்.என்.என்.சுஹைல்)


ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் எதிர்க்­கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான் மற்றும் காவிந்த ஜய­வர்­தன ஆகியோர் ஜெனீ­வா­வுக்கு பய­ண­மா­க­வுள்­ளனர்.


ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் 51வது அமர்வு எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.


இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ரான பிரே­ர­ணை­யொன்று குறித்த தொடரில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நிலையில் அர­சாங்கம் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி தலை­மை­யி­லான உயர்­மட்டக் குழு­வொன்று விஜயம் செய்­துள்­ளது. இத­னி­டையே, நாளை மறு­தினம் கொழும்பு மாவட்ட ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த ஜய­வர்­தன ஆகியோர் ஜெனீவா செல்­ல­வுள்­ளனர்.


உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் விவ­காரம் குறித்த விசா­ர­ணைகளை துரி­தப்­ப­டுத்த வலி­யு­றுத்­தியும் பாதிக்­கப்­பட்ட தரப்­புக்கு நியாயம் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்பை பெறு­வ­துடன் இவ்­வி­ட­யத்தில் சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­ள­வி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.


அத்­தோடு, குறித்த தாக்­கு­த­லுக்கு பின்­ன­ரான முஸ்­லிம்கள் மீதான நட­வ­டிக்­கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் விட­ய­மா­கவும் பேசப்­ப­ட­வி­ருப்­ப­தாக அவர் விடி­வெள்­ளிக்கு மேலும் தெரி­வித்தார்.


குறிப்­பாக பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தி முறை­யற்ற விதத்தில் இடம்­பெறும் கைது நட­வ­டிக்­கைகள் மற்றும் சிவில் அமைப்­புகள் மீது விதிக்­கப்­பட்­டுள்ள தடைகள் குறித்தும் சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அண்­மைக்­கா­ல­மாக அர­சுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்த பலரும் அத்­து­மீறி கைது செய்­யப்­ப­டு­வது குறித்தும் அவர்கள் மீது பிர­யோ­கிக்­கப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் எடுத்­து­ரைக்­கவுள்ளோம்.

ஜெனீவா கூட்டத் தொடர் இடம்­பெ­று­கின்­ற­வே­ளையில் அங்கு இடம்­பெறும் இணை அமர்வுகளில் கலந்­து­கொண்டு மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசவுள்ளோம். அத்தோடு, சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்து இலங்கை மக்களின் நிலைமை குறித்து எடுத்துரைக்க எதிர்பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார். – Vidivelli

No comments

Powered by Blogger.