Header Ads



எதிர்வரும் தேர்தல்களின் தனித்து போட்டியிடவுள்ளதாக வீரவன்ச அறிவிப்பு


எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் மேலவை இலங்கை கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது நிறைவேற்று சபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.


அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு தாம் தயாரில்லை. சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று அமையும் பட்சத்திலேயே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம்.


ஆனால் தற்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியே இடம்பெறுகின்றது.


எனவே எதிர்காலத்தின் நன்மை கருதி, கட்சியின் நடவடிக்கை எடுக்கப்படும் என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.