Header Ads



விவசாயிகளுக்கு இலவசமாக 50 கிலோ யூரியா


2 ½ ஏக்கருக்கும் குறைவான வயல் நிலங்களைக் கொண்ட 375,000 சிறு விவசாயிகளுக்கு தலா 50 கிலோகிராம் யூரியா உர மூடை இலவசமாக வழங்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


பெரும்போக செய்கைக்காக இந்த உரம் வழங்கப்படுமென அறிவித்துள்ளது.


உரத்தின் அளவை இலவசமாக வழங்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச யூரியா உரம் மற்றும் மும்மடங்கு சூப்பர் உரம் வழங்கும் ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு நேற்றுமுன்தினம் விவசாய அமைச்சில் கைச்சாத்திட்டுள்ளது.


அந்த ஒப்பந்தங்களின்படி இந்த போகத்துக்குத் தேவையான யூரியா உரம் மற்றும் மும்மடங்கு சூப்பர் உரம் வழங்குவதற்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.


இதேவேளை அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மனித பாவனைக்கு உகந்ததல்லவென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெனாண்டோ பதிலளித்திருந்தார்.

No comments

Powered by Blogger.