Header Ads



நாவலப்பிட்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீர்கொழும்பு, பெரியமுல்லையில் நிதி சேகரிப்பு


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி மக்களுக்காக நீர்கொழும்பு வை.எம்.எம்.ஏ. கிளையினர்  நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேச மக்களிடம் நிதி சேகரித்தனர்.

வை.எம்.எம்.ஏ. நீர்கொழும்பு கிளை அங்கத்தினர்கள் இன்று -17- புதன்கிழமை நாவலப்பிட்டி, கரஹன்துங்கல மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சென்று  சேகரிக்கப்பட்ட 949204 ரூபாவுக்கான காசோலையை நீர்கொழும்பு வை.எம்.எம்.ஏ. தலைவர் எம்.எச்.எம். முயின், சங்கத்தின் சமய ஆலோசகர் மெளலவி ஐ.எல். ஹனீபா ஆகியோர் இணைந்து மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் உப தலைவர் மெளலவி சிபானிடம் கையளித்தனர். 

இந் நிகழ்வில் சங்க அங்கத்தினர்களும் கலந்துகொண்டனர். 

- எம்.எம்.இஸ்மதுல் றஹுமான் -



No comments

Powered by Blogger.