Header Ads



மஹரகம கபூரியாவை கபளீகரம் செய்ய சதி, சுலைமான் வைத்தியசாலையும் பறிபோனது, தடுத்து நிறுத்த அணிதிரளுமாறு முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு


கொழும்பு மாவட்டத்தில், மகரகம மாநகர சபைக்குட்பட்ட நகரில்  கபூரியா அரபுக்  கல்லுாாியை கொடை வல்லல் காலம் சென்ற என்.டி.எச் அப்துல் கபூர் அவா்களினால் 1931ல் ஆரம்பிக்கப்பட்டு்ளளது. 

இக் கல்லுாரிக்கு தற்பொழுது வயது 91 ஆகும்.  இக் கல்லுாாியில் கற்றவா்களது பட்டத்தில் (கபூரி) என பட்டம் வழங்கப்பட்டு இருக்கும். அந்த அளவுக்கு அது சிறந்த கலாசாலையாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விளங்கியது, இதில் கற்றவா்கள் அரபு, குர்ஆண் மத விவகாரத்தில் பாண்டித்தியம் பெற்றனா். அதனைத் தொடா்ந்து அவா்கள் பட்டப்படிப்பினை தொடா்ந்துள்ளனா்.  நாட்டின் நாலா பாகத்திலிருந்து உலகக் கல்வியோடு குர்ஆணையும் 7 வருடங்கள் கற்று சுமந்து இங்கு கற்றவா்கள் ஆயிரக் கணக்கில் உள்ளனா்.

இந்த அரபுக் கல்லுாாியை  உருவாக்க காரணமாயிருந்தவரின் என்னக்கருவுக்கு வித்தியாசமான முறையில்  அவரின் 4வது ஜேனரேசன் முறையில் ஒருவா் அஸ்மத் கபூர்.  இக் காணியின் அரைவாசியை விற்பதற்கு கம்பனிகளுக்கு கட்டங்கள் கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றார். அதற்காக பழைய மாணவ சங்கத்தினா் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செ்ய்துள்ளனா். அவ் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இங்கு பயிண்ற ஆயிரக்கணக்கான கபூரிகள் நாட்டின் உஸ்தாதுகள்,  மௌலவிகள், அதிபா்கள், ஆசிரியா்கள் உலமாக்கள்,  என மாா்க்கரீதியாக கடமைகளுடன் வேறு சிலா்  உயா் பதவிகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ளனா்.

தற்பொழுதும் இங்கு 80 மாணவா்கள் உள்ளனா். இக் அரபிக் கல்லுாாியில் 35 ஏக்கா் காணி விஸ்தீரனம் கொண்டது. இக் காணியில்  17 அரை ஏக்கா் அரபுக் கல்லுாாிக்கும் 17 அரை ஏக்கா் கொழும்பு சாஹிராக் கல்லுாாிக்கும் என்.டி.எச் அப்துல் கபூரினால் வக்பு செய்யப்பட்டுள்ள்து. 

அத்துடன் இக் கல்லுாாியில் கற்கும் மாணவா்களுக்கும், இக்கல்லுாாியின் நூர்தீன் ஹாஜியார் அப்துல் கபூர் அவர்கள் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியை ஆரம்பித்து, அதனை நடாத்திச் செல்வதற்கான முக்கிய வருமான வழியாக கிரேன்ட் பாஸ் வீதியில் காணியொன்றை கொள்வனவு செய்து, அங்கு தனியார் மருத்துவமனையொன்றை நிறுவியுள்ளார். 

கபூர் ஹாஜியார் தனது சொந்த மைத்துனரான டொக்டர் சுலைமானுடன் இணைந்து 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுலைமான் மருத்துவமனை என்ற பெயரில் குறித்த காணியில், அந்தத் தனியார் மருத்துவமனையை நிர்மாணித்திருக்கிறார். இந்த மருத்துவமனையின் மூலம் பெறப்படுகின்ற வருமானத்தின் மூலம் கபூரிய்யா அரபுக் கல்லூரியை இயங்க வைப்பதே அவர்களது குறிக்கோளாகக் காணப்பட்டது.

(இக் கல்லுாாியை ஆரம்பித்து அடிக்கடி அவா் தனது காரில் அங்கு விஜயம் செய்வதுண்டு, ஒரு  முறை என்.டி.எச். அப்துல் கபூர் அக் கல்லுாாிக்குச் சென்றபோது, அங்கு அன்னாசி கன்றுகள் காய்த்து இருந்தாகவும் அதனை அவா் பாா்த்தாகவும் அவருக்குத் தெரியாமல் காரில் 2 அண்னாசிப் பழங்களை காரில் வைக்கப்பட்டுள்ள்ன. அவரது மனைவி அதனை வெட்டி வைத்ததும் இப் பழங்கள் ஏது ? எனக் கேட்டுள்ளளா்  தனது மனைவி பதிலளிக்ககையில்,  உங்கள் காரில் இருந்தே எடுத்தேன்,  அதனை அவா் சாப்பிடவில்லை எனவும் மீண்டும ஒரு முறை அரபுக் கல்லுாிக்கு வந்து இக்கலாசாலைக்காக வக்பு செய்யப்ட்டதில் இருந்து எந்த பொருளும் எனக்கு வேண்டாம், இங்குள்ள செலவினங்கள் அல்லது கற்கும் மாணவா்களுக்கே அது செல்ல வேண்டும் என கூறியதாகவும் கல்லுாாியின்  குறிப்பில் உள்ளதாகவும், பழைய மாணவா் செயலளாா் தெரிவித்தாா். 1948 ல் கபூர் காலமாகியுள்ளாா்.

தற்பொழுது என்.டிஎச்.அப்துல் கபூரின் 4 வது தலைமுறை எனச் சொல்லி, வெளிநாட்டில் கல்வி கற்றவா் இக் கல்லுாாியை 3 கம்பனிகளுக்கு நிரந்தர கட்டிடங்கள் அமைப்பதற்கு கல்லுாாியை இடைமறித்து, நீண்ட சுவர் அமைத்துள்ளாா். அத்துடன் அங்குள்ள மத்ரசா மாணவா்கள் சில கட்டிடங்கள் விடுதி , குடிதண்னீா் பாவிக்க முடியாது போகியுள்ளது. கடந்த வாரம்  இங்கு ஜம்ஆத்  தொழுகையும் நடைபெற முடியாமல் இருந்துள்ளது. 

பின்னா் தொழுவதற்காக அவரது அனுமதியின் பேரில்  பாதுகாப்பு அதிகாரியினால் திறக்கப்பட்டுள்ளது.

 தற்பொழுது இக்கல்லுாிக்கு பாதுகாப்புச் சுவா் அமைத்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் நியமித்துள்ளார்.  கபூர் குடும்பத்தின் சொத்துக்கள்  கொழும்பில் பல இடங்களிலும் இருந்துள்ளன. அரசாங்கம் பல காணிகள் கட்டிடங்களை சுவிகரித்துள்ளது. பண்டாரவலை சென்தோமஸ் கல்லுாாி, காணி கூட கபூர் வழங்கியது.  கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு முன்னால் உள்ள ஹோட்டல்கள், கட்டிடங்களை நகர அபிவிருத்தி அதிகார சபை அபகரித்துள்ளது. இரானுவத்தினா் அதனை மீள வடிவமைத்து வருகின்றனா். அதற்குச் சொந்தக் காரா் யாா் என்று தெரியாமல் உள்ளது.

இவற்றில கரிசனை காட்டாமல்   வக்பு செய்யப்பட்ட  காணியை 4வது தலைமுறை என்பவா் இச் செயல்களினைச் செய்து வருகின்றாா்.   

சுலைமான் வைத்தியசாலை, ஓடேல் கம்பனி ஒரு பாரிய கோட்டல் ஒன்றை கட்டுவதற்கு விற்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் தற்பொழுது மகரகமவில் உள்ள காணியை விற்பதற்கும், கம்பனி  ஹோட்டல்களை நிர்மாணிக்க குத்தகைக்கு விடுப்பதற்கும்  இந்நபா் முயற்சி எடுத்து வருகின்றாா்.

இவ் விடயம் சம்பந்தமாக பழைய மாணவா்கள் ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்து வழக்கு நடைபெற்று வருகின்றது.   இவ் விடயம் சம்பந்தமாக பழைய மாணவா்கள், மற்றும் உலமா சபை, முஸ்லிம் சயம பண்பாட்டுத் திணைக்களத்தின் வக்பு சபை ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் நேற்று முன்தினம் 17 வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் ஒன்று கூடி இக் காணியை காப்பாற்றுவதற்கு சகல முஸ்லிம்களும் முன்வருமாறு பழைய மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்

இன்று 18 கொழும்பு 2 நிப்போன் ஹோட்டலில் முன்னாள் ஆளுனா் அசாத் சாலி, என்.எம் அமீன், பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான், சட்டத்தரனி ருஸ்தி ஹபீப், பழைய மாணவ செயலாளா் தில்சாத் முஹம்மத் ஆகியோா் ஊடக மாநாடை ஒன்றை நடாத்தி ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினாா்கள. 

இவ் விடயம் சம்பந்தமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணர்கள், புத்திஜீவிகள், அரசாங்கம் முன்வந்து  கபூரியா அரபு கலாசாலை அதன் காணி சொத்துக்களை பாதுகாக்க முன்வருமாறு அழைப்பு விடுக்க்படப்டது. 

அத்துடன் அடுத்த வார வெள்ளிக்கிழமை முஸ்லிமகள் ஒன்று கூடி கிராண்பாஸ் உள்ள  சுலைமான் வைத்தியசாலை எதிர்ப்பு ஆர்ப்பாாட்டம் ஒன்றை நடத்தவும் அசாத சாலி அழைப்பு விடுத்தார்,  என். டி.எச் அப்துல் கபூர் குடும்பத்தினை அழைத்து இவ்விடயமாக கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருதல் 4 வது தலைமுறை அஷ்மத் கபூர் மட்டும் இச் செயலில் இறங்கியிருப்பதனையிடடு அவா்கள் கருத்து தெரிவிக்க வேண்டும்.  எனவும் அசாத் சாலி கருத்து தெரிவித்தா்.


 Ashraff A Samad






1 comment:

  1. இந்த விவகாரத்தை சுமுகமாக தீர்ப்பதற்கு என்.டீ.எச் அப்துல் கபூர் ஹாஜியார் அவர்களுடைய குடும்பத்தை முதலில்அணுகி கலந்தாலோசனை செய்து இருசாராரும் உடன்படக்கூடிய ஒரு தீர்வுக்கு வரவேண்டும். அது தவிர முஸ்லிம் சமூகம், முஸ் லிம் சமூகம் என சத்தம் போடுவதால் எந்த பிரயோசனமுமில்லை. அந்த முயற்சி பலனடையாது போனால், துறைபோன சட்டத்தரணிகளை அணுகி, நீதிமன்றம் மூலம் தான் தீர்வுக்குச் செல்ல வேணடும். அத்தகைய முயற்சிகள் பெரும் பணச் செலவை வேண்டிநிற்கும். அதற்கான உரிய ஏற்பாடுகளை முதலில் மேற்கொள்ள வேணடும். அவற்றை விட்டு வெறுமனே முஸ்லிம் சமூகத்தின் உதவி எனச் சத்தம் போடுவதால் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைளும் எடுக்கப்படமாட்டாது.

    ReplyDelete

Powered by Blogger.