Header Ads



ரணில் விரித்துள்ள வலையில், அரசியல்வாதிகள் நிச்சயம் வீழ்வார்கள்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரித்துள்ள சர்வகட்சி அரசு எனும் வலையில், விலைபோகும் சில அரசியல்வாதிகள் நிச்சயம் வீழ்வார்கள் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தமது அணியில் இருந்து பிரிந்து சென்றவர்களை வளைத்துப் போடுவதற்காக அமைச்சு பதவி குறித்து ரணில் பேரம் பேசி வருகின்றார்.

அத்துடன், ஊழல், மோசடிகளைக் காட்டி, மொட்டுக் கட்சியினரின் ஆதரவையும் திரட்டியுள்ளார்.

உரிய நேரம் வரும்போது விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ரத்தன தேரர் போன்றவர்களும் ரணிலின் பிடிக்குள் சிக்குவார்கள். ஆளுங்கட்சி பக்கம் சாய்ந்துவிட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமும் கூட.

இப்படியான அரசியல் நிகழ்ச்சி நிரல் கொண்ட அரசாங்கத்தில் நாம் எப்படி இணைவது? எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது?" என்று கூறியுள்ளார்.    

No comments

Powered by Blogger.