Header Ads



ரணிலின் திட்டம் தோல்வி - அரசாங்கத்துடன் இணைய கட்சிகள் பல மறுப்பு


-சி.எல்.சிசில்-

சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

பாராளுமன்றத்தில் உள்ள பல கட்சிகள், கட்சிகளாக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விரும்பாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சர்வ கட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக சர்வ கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்துடன் இணைந்தவுடன், அரசியல் கட்சிகளாக இல்லாவிட்டாலும், கட்சிகளிலிருந்து தனித்தனியாக வந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.


No comments

Powered by Blogger.