Header Ads



தானிஸ் அலிக்கான விளக்கமறியல் நீடிப்பு


கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தானிஸ் அலி என்ற நபரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அவர் இன்று -01- கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக துபாய் நோக்கி செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.