Header Ads



சுயநலம், மனிதாபிமானமற்ற அரசியலை ரணில் தொடர்கிறார் - கடந்த காலத்தில் எதையும் கற்கவில்லை என்று தெரிகிறது


 "தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலிமுகத்திடல் போராட்டம் காரணமாகவே பதவியை பெற்ற அவர் கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது" என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

தேசிய சொத்துக்களை அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், ஊழல்வாதிகளை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். 

புதிய நடைமுறைகளுக்குப் பதிலாக, ஜனாதிபதி பழைய நடைமுறைகளையே தொடர்கிறார். அவர் தனது பழைய அமைச்சர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவுடன், சுயநலம் மற்றும் மனிதாபிமானமற்ற அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தொடர்கிறார்.

எனவே, பழைய நடைமுறைகளை கைவிட்டு, திருடர்களை தண்டித்து, நாட்டின் தேசிய செல்வத்தை திருடர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என அவருக்கு கடுமையாக அறிவுறுத்துவதாக ஓமல் பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.