Header Ads



ஆயுதம் தாங்கிய குழுவினால், குடும்பஸ்தர் வெட்டிக்கொலை


- க. அகரன் -

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சா என்று அறியப்பட்ட 30 வயதுடைய யோன்சன் மரணமடைந்துள்ளார். 

ஆயுதம் தாங்கிய குழு ஒன்று தாக்கியதில் பலத்த காயமடைந்து, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிதம்பரபுரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற சடலத்தை மீட்டனர்.

சடலம் சட்டவைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


 

No comments

Powered by Blogger.