Header Ads



சிறைச்சாலைக்குள் தொலைபேசி பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட டனிஸ் அலி - 14 நாட்கள் சிறைதண்டனை


மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளப் போராட்டக்காரரான டனிஸ் அலி, சிறைச்சாலைக்குள் தொலைபேசி பயன்படுத்தியக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் அவருக்குப் 14 நாட்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்தக் குற்றச்சாட்டின் கீழ், கடந்த மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த டனிஸ் அலி கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலையில்  அவர் பயன்படுத்திய தொலைபேசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

இதேவேளை, டனிஸ் அலிக்கு  எவ்வாறு தொலைபேசி கிடைத்தது என்பதுத் தொடர்பிலும் சிறைச்சாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.