ஆசிரியர் MSM றிஸ்மி காலமானார்
நீர்கொழும்பு அல் ஹிலால் தேசிய பாடசாலை ஆசிரியர் எம்.எஸ்.எம்.றிஸ்மி காலமானார்.
கம்மல்துறைச் சேர்ந்த இவர் எழுத்தாளரும், கவிஞரும் ஆவர். சுகயீனமுற்ற நிலையில் றாகம போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் வெள்ளிக்கிழமை 01-07-2022 மாலை காலமானார்.
52 வயதான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கம்மல்துறை அல் பலாஹ் மஹா வித்தியாலய ஆசிரியை ருஸ்மியாவின் கனவருமாவர்.
ஜனாஸா நல்லடக்கம் நாளை சனிக்கிழமை (02) காலை கம்மல்துறை பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.
யா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்துவிடு, அவருடைய கப்று வாழ்க்கையை சுவனத்து பூஞ்சோலையாக்கிவிடு. அவருக்கு உயர்தரமான சுவனத்தை வழங்கிவிடு, அவருடைய குடும்பாதாருக்கு நீயே பாதுகாவலனாக இருந்துவிடு.
Post a Comment