ஜனாதிபதி தேர்தலில் Mp க்களின் ஆதரவைப் பெற பணப் பேரம் ஆரம்பம்
கோட்டாபயவின் எஞ்சிய இரண்டேகால் வருட ஆட்சியை நிறைவு செய்யும் வகையில் நிரந்தர அதிபரை தெரிவு செய்வதற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை பணத்திற்கு கட்டுப்பட வைக்கும் குதிரை பேரம் என அழைக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எம்.பி.க்களின் விசுவாசத்துக்கு கோடிக்கணக்கில் பணம் தர ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய அரசியல் கட்சிகளின் பலம் வாய்ந்த உறுப்பினர்கள் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ வணிகர்கள் குழுவொன்று பணத்தை இறைக்க நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்குச் சென்ற பலசாலியான தொழிலதிபரும் பணம் கொடுப்பதில் முதலிடத்தில் உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment