Header Ads



நாம் டளஸை போட்டியிடச் செய்தோம், நாமும் வாக்களித்தோம், ஆனால் தோல்வியடைந்துவிட்டார்


நாம் டலஸை போட்டியிடச் செய்தோம். நாமும் வாக்களித்தோம் ஆனால் தோல்வியடைந்துவிட்டார் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதிக வாக்குகள் கிடைத்தமையால் ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற்றார். எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று  நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என தெரிவித்த அவர், எந்த அரசாங்கம் வந்தாலும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றார்.

 இது மக்கள் ஆணை இல்லை என பலரும் கூறினாலும் எம்மை பொறுத்தவரை இதுதான் மக்கள் ஆணை என்றார்.

எனவே ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டங்கள் போதுமென்று தான் நினைப்பதால்  காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது இதனை புரிந்துகொண்டு அங்கிருந்து வெளியேறி உங்கள் தொழில்களை செய்யுங்கள் என்றார்.

1 comment:

  1. இந்தப் படு பொய்யனின் கருத்தைப் பாருங்கள். ரணிலைப் போட்டியிடவைத்து அதற்கேற்ற சூழலையும் அடிமுடிகளையும் ஏற்பாடு செய்து விட்டு ரணில் மேலால் வெற்றி பெற்ற பின் கூறுவதைப் பாருங்கள். டளஸை அவர் பிரேரித்து ஆதரித்து அனுப்பினாராம். அவர் தோல்வியடைந்து விட்டாராம். தேர்தலல்ல. இதுதான் சரியான தேர்தலாம். இந்த படுபொய்யனுக்கு சரியான கூலியைக் கொடுக்க அல்லாஹ்வைத்தவிர வேறுயாராலும் முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.