Header Ads



ரணிலை மிக மோசமாக வர்ணித்துள்ள சனத் ஜயசூரிய


பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவசரகாலநிலையையும் ஊரடங்கு சட்டத்தினையும் அறிவித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத்ஜெயசூரிய மிஸ்டர் பீன் கிரிக்கெட் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளது போல இது உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தெரிவுக்குழுவினர் அவர் ஒரு நடிகர் கிரிக்கெட் வீரர் இல்லை என நிராகரித்தாலும் அவரை கிரிக்கெட் அணிக்குள் கொண்டுவந்தால் எப்படியிருக்கும் என்பதை நினைத்து பாருங்கள் நடுவர் அவர் ஆட்டமிழந்துவிட்டார் என அறிவித்த பின்னரும் அவர் ஆடுகளத்திலிருந்து தொடர்ந்தும் விளையாடிக்கொண்டிருக்கின்றார்.

இனியும் விளையாட்டுக்கள் இல்லை இறுதி வீரருக்கு தனியாக துடுப்பெடுத்தாடுவதற்கு அனுமதியில்லை என சனத்ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.