Header Ads



ஓட்டம் பிடித்த கோட்டா, வேடிக்கை பார்த்த மஹிந்த - வரலாற்றில் முதற் தடவை என வர்ணிப்பு (வீடியோ)



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை, சில நிமிடங்களில் முடிவடைந்ததாகவும் இது திட்டமிடாத வரலாற்றில் எப்போதும் நடக்காத சம்பவம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஹர்ச டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி எழுந்து சென்று விட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

 பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  சிறப்புரை ஒன்றை ஆற்றினார். இதன் போது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு தடையேற்படுத்தி, ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கோட்டா கோ ஹோம் என கோஷமிட்டு அவர்கள் ஜனாதிபதிக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி அவையில் இருந்து செல்லும் விதம் அதில் பதிவாகி இருந்தது.


No comments

Powered by Blogger.