கட்சித் தலைவர்களின் தீர்மானம், சபாநாயகரினால் ஜனாதிபதிக்கு அறிவிப்பு
கட்சித் தலைவர்களின் தீர்மானங்கள் குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எழுத்து மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது பதவிகளில் இருந்து உடன் விலக வேண்டும் என்ற தீர்மானமும் உள்ளடங்கியுள்ளது.
இதேவேளை சர்வ கட்சித் தலைவர்கள் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தாம் உடன்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருந்ததாக பிற்பகல் வேளையில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment