Header Ads



சட்டவிரோதமாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ரணிலுக்கு கட்டுப்பட்டு, மக்களுக்கு எதிராக ஆயுதத்தை ஏந்த வேண்டாம் - பொன்சேக்கா


பாதுகாப்பு படையினர், ரணில் விக்ரமசிங்க வழங்கும் சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணாண உத்தரவை செவிமடுக்ககூடாது பின்பற்றக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரணில் ஜனாதிபதியின் அதிகாரங்களை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளார். தன்னை பதில் ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் வதந்திகள் பரவுகின்றன. முப்படையினருக்கும் பொதுமக்களிற்கும் இடையில் மோதல் உருவாகும் கடும் ஆபத்து காணப்படுகின்றது.

ஆயுதம் ஏந்தாத அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் எனவும் ஊழல் அரசியல்வாதிகளிற்கு எதிராக சட்டத்தை பின்பற்றும் ஒழுக்கமான இராணுவம் என்ற வகையில் ஆயுதங்களை உயர்த்துமாறும் நான் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த தருணத்தில் நான் போராட்டக்களத்தில் நிற்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.