Header Ads



துப்பாக்கி, தோட்டாக்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர் - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு


இராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றம் அருகே, பத்தரமுல்லை -பொல்துவ சந்தியில் இராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நேற்று (13) மோதல் ஏற்பட்டது.

இதன்போதே, மேற்படி துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.