Header Ads



காலிமுகத் திடல் போராட்டக்காரர்களை கிளர்ச்சியாளர்கள் போன்று, அடக்காததாலே கோட்டாபய ராஜினாமா செய்ய நேரிட்டது


மே 9ஆம் திகதி கோட்டகோகம பிரதேசத்தில் தாக்குதல் நடத்த வந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இன்று -26- நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு செயற்பாட்டாளர்களை கடுமையாக விமர்சித்தார்.

போராட்டகாரர்களை, 71, 89 இல் ஏற்பட்ட கிளர்ச்சிகளை போன்று அடக்கியிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாததால், கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், போராட்டம் நடக்கும் பகுதியில் போதைக்கு அடிமையானவர்கள், கஞ்சா அடிமைகள், ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். IB


No comments

Powered by Blogger.