Header Ads



கோட்டாபயவின் பதவி விலகலுக்காக காத்திருக்க தேவையில்லை - புதிய பிரதமரை நாளை பரிந்துரைக்கலாம்


புதிய பிரதமர் ஒருவரின் பெயரை பரிந்துரை செய்வதற்காக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் இணைந்து இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

இக் கலந்துரையாடலில் பரிந்தரை செய்யப்படும் பெயரை நாளை காலை இடம்பெறும் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகரிடம் தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை சபாநாயகர் காத்திருக்காது உடனடியாக ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும் அதற்கான அறிவிப்பை உடனடியாக சபாநாயகர் வெளியிட வேண்டும் எனவும் ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், ஞாயிற்றுக்கிழமைக்குள் இலங்கையின் புதிய ஜனாதிபதியை நாம் தேர்ந்தெடுக்கலாம் என்றும்,  அடுத்த புதன்கிழமை வரை காத்திருப்பது மிகவும் காலதாமதம் ஆகலாம் எனவும் அவர் நேற்று பதிவிட்ட ட்டுவிட்டர் பதிவொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. TW


No comments

Powered by Blogger.