கோட்டாபய இலங்கை வருகிறார் - கொழும்பில் வீடு, பாதுகாப்பு, வாகனங்களுடன் சலுகைகள் அவருக்கும், மனைவிக்கும் கிடைக்கும் - பீரிஸ்
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, அடுத்த மாதம் இலங்கை திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இராஜினாமாவை அடுத்து, ஓய்வு பெற்றுள்ள ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொள்ள உள்ளார் என்றும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
அதற்கமைய, கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு படை, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள், முன்னாள் ஜனாதிபதிக்கும் அவருடைய மனைவிக்கும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து அவருடைய பிரத்தியேக வீடு வரை இந்த நாட்டு இளைஞர்கள் யானை மார்க் சோடா போத்தல் வழங்கி வரகேற்கக் காத்திருக்கின்றார்கள்.
ReplyDelete