ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியுள்ளதாக பகிரப்படும் கடிதம் போலியானது - ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
இந்நிலையிலே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு இன்று மாலை அறிவித்திருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்த கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் சபாநாயகரின் ஊடக அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment