Header Ads



இலங்கையில் புதிய அரசாங்கத்திற்கு, ஒத்துழைக்க தயாராக உள்ளோம் - ரஷ்ய


இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் அது உள்நாட்டு விவகாரங்களாகும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஸாகரோவா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் அதன் உள்நாட்டு விவகாரமாகும், மேலும் நாட்டின் அரசியல் செயல்முறையானது, அதன் அரசியலமைப்பு மற்றும் பயனுள்ள சட்டங்களுக்கு இணங்க மேலும் வளர்ச்சியடையும் என நட்பு நாடு என்ற ரீதியில் நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.

நாடு வழமை நிலைமை திரும்பும் என்றும், இலங்கையின் புதிய அதிகாரிகள் தேசிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.