கோட்டாவும், ரணிலும் அதிகாரத்தை துறப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை, அதனை உடன் செய்ய வேண்டும்
உலகின் ஏனைய சர்வாதிகாரிகளின் தலைவிதியைப் போன்று நாட்டிலிருந்து தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் விருப்பத்திற்கு பணிந்து, தலைமறைவாக இருந்து தனது அதிகாரத்தை பாதுகாக்க முயன்ற கோட்டாபய ராஜபக்சவிற்கு உலகின் ஏனைய சர்வாதிகாரிகளின் தலைவிதியைப் போன்று தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் அதிகாரத்தை துறப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாததால், அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஜனநாயகப் பொதுப் போராட்டத்தின் உண்மையான சாராம்சத்தைப் புரிந்துகொண்டு, கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை நாட்டிலிருந்து மீட்டெடுக்கவும், நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் வெற்றியை நோக்கி அதனை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியினையும் மேற்கொண்டுள்ளேன்.
Post a Comment