Header Ads



9 ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு பொன்சேக்கா அழைப்பு, எந்த முடிவையும் எடுக்கவில்லை என்கிறார் முஜிபுர் ரஹ்மான்


எதிர்வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் திகதி மக்கள் கொழும்பிற்கு வந்தால் தான் தலைமைத்துவத்தை வழங்கத்தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் ஒன்பதாம் திகதி கொழும்புக்கு வருமாறு மக்களுக்கு பொன்சேகா அழைப்பு விடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்புக்கு வந்து ஒரு மாதமாவது கொழும்பில் தங்கியிருந்து இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருமாறு நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை கொன்சகாவின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எந்த முடிவையும் எடுக்கவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.