Header Ads



இலங்கையில் ஹோட்டல் முன்பதிவுகளை ரத்துச்செய்த 45 சதவீதமான சுற்றுலாப் பயணிகள்


-சி.எல்.சிசில்-

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் போராட்டங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.

இந்நிலைமை இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரசபை கூறுகிறது.

No comments

Powered by Blogger.