Header Ads



3 வருடங்களுக்கு பின், கடற்கரை வெளியில் ஹஜ் பெருநாள் தொழுகை (வீடியோ)


 புனித ஹஜ் பெருநாள் தொழுகை   3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஞாயிற்றுக்கிழமை(10) காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது  கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது  பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் . 

இதனை தொடர்ந்து  தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக  உறவினர்கள் இநண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று  பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து  கொண்டமை குறிப்பிடத்தக்கது .

பாறுக் ஷிஹான்

No comments

Powered by Blogger.