Header Ads



மாணவர்கள் 2 பேரின் துணிகரச் செயல், தாய் கைது


இவ்வாறு காப்பாற்றப்பட்ட குழந்தை கரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ள பொலிஸார், குழந்தை எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

வீட்டுப் பிரச்சினை காரணமாக, குறித்த குழந்தையின் தாய், இன்று -19- குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது கிணற்றிலிருந்து அழுகுரல் வருவதை அவதானித்த அவ்வழியே சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர், கிணற்றுக்குள் பாய்ந்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

அத்துடன் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.