மாணவர்கள் 2 பேரின் துணிகரச் செயல், தாய் கைது
இவ்வாறு காப்பாற்றப்பட்ட குழந்தை கரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ள பொலிஸார், குழந்தை எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
வீட்டுப் பிரச்சினை காரணமாக, குறித்த குழந்தையின் தாய், இன்று -19- குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதன்போது கிணற்றிலிருந்து அழுகுரல் வருவதை அவதானித்த அவ்வழியே சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர், கிணற்றுக்குள் பாய்ந்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.
அத்துடன் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment