Header Ads



2 பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு, 5 வயது சிறுவன் உயிரிழப்பு - சந்திரிக்கா ஆற்றில் சம்பவம்


எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் 32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன்  குதித்துள்ளார்.

இதில், 5 வயதான சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த தாயும் அவரது 11 வயது மகனும் இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இருவரும் தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.