Header Ads



லொறியின் பின்புற பகுதி விழுந்ததில் 13 மாணவர்கள் காயம்


கலென்பிந்துணுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது லொறியின் பின்புற பகுதி விழுந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில்  37 மாணவர்கள் லொறியில் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரதேச வாசிகள் காயமடைந்த மாணவர்களை கலென்பிந்துணுவெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில், மாணவர் ஒருவரின் கால் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துணுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments

Powered by Blogger.