Header Ads



10 நாட்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு என்றார் ஜனாதிபதி, பொறுமையாக இருப்பதாக பின்வரிசை Mp க்கள் தெரிவிப்பு


அடுத்துவரும் 10 நாட்களுக்குள் எண்ணெய் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்ட பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் (02) ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார். 

இந்த கலந்துரையாடலின் போது நாட்டில் தற்போது பெரும் பிரச்சினையாக மாறியிருக்கும் எரிபொருள், எரிவாயு உட்பட சமகால பிரச்சினைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியதாகவும் அறிய முடிகின்றது. 

இதன் போதே, எரிபொருள் பிரச்சினைக்கு இன்னும் 10 நாட்களில் தீர்வு பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். இவ் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் 10 நாட்களுக்கு பொறுமையாக இருப்பதாக கூறியுள்ளனர். TN

No comments

Powered by Blogger.