Header Ads



VIP க்குரிய வரப்பிரசாதத்தை மறுத்த, சங்ககார - சமூக ஊடகங்களில் பாராட்டு


சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க சென்ற சங்கக்கார VIP க்குரிய வரப்பிரசாதத்தை மறுத்து, சாதாரண நடைமுறையின் கீழ் பெற்றுள்ளார்.

இதற்காக மக்களோடு மக்களாக இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார்.

அவரை வரிசையில் நிற்காமல் உள்ளே வரும்படி பல அதிகாரிகள் அழைத்த போதும், சங்கக்கார அதனை மறுத்துள்ளார்.

சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான, நேர்மையான முறையில் மக்களோடு இணைந்து செயற்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களால் அரசாங்கத்தின் வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், நாட்டுக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சங்கக்காரவின் நேர்மையான செயற்பாடு பாராட்டத்தக்கது. 


No comments

Powered by Blogger.