Header Ads



காத்திருக்கும் முஸ்லிம், பெண்களின் அங்கலாய்ப்பு (Video)


திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் நேற்று (03) சமையல் எரிவாயுக்காக அதிகாலை 4 மணி முதல் காத்திருந்த போதும் எரி வாயு வாகனமே அங்கு வராமை வெறுங்கையுடன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல மணி நேரங்கள் காத்திருந்த போதும் எரிவாயு கிடைக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்து வீடு சென்றுள்ளனர். வேகாத வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் அதிகாலை முதல் மதியம் 12.30 மணி வரை காத்திருந்த தாய்மார்கள் வயோதிபர்கள் பெரும் கவலையுடன் வீடு திரும்பினர். சமையல் எரிவாயு குறித்த இப்பகுதிக்கு கிடைக்கப் பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளதாக கவலை வெளியிடுகின்றனர். 

No comments

Powered by Blogger.