விபரச்சார விடுதிகளில் குவியும் அமைச்சர்கள், ரணில் பிரதமராக முன் பொன்சேக்காவை அழைத்த ஜனாதிபதி (வீடியோ)
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் ஹெரோயின் போதைப் பொருளை உட்கொண்டு இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்
மாண்புமிகு பிரதமர் அவர்களே, நீங்கள் இன்று அந்த நாற்காலியில் இருக்கிறீர்கள், நீங்கள் பிரதமராக பதவியேற்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன், ஜனாதிபதி என்னை அழைத்து உடனடியாக பிரதமர் பதவியை ஏற்கச் கூறினார். நான் அவருக்கு நான்கைந்து நிபந்தனைகளை வைத்தேன். எமது கட்சியினருடைய ஒப்புதலுடன் நான் பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறினேன் என தெரிவித்துள்ளார்.
Post a Comment