இலங்கைக்கு உதவுவதாக சுவிட்சர்லாந்து உறுதியளிப்பு
சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நீதியமைச்சில் இடம்பெற்றது.
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திருமதி வசந்த பெரேராவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இலங்கைக்கு சுவிட்சர்லாந்து தன் முழு ஆதரவை அளிக்கும் என சுவிஸ் தூதர் உறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதாரச் சூழல் குறித்து நீதி அமைச்சர் அவருக்கு விவரித்தார்.
இலங்கையும் சுவிட்சர்லாந்தும் வலுவான பொருளாதார மற்றும் அரசியல் நட்பு தொடர்பான நீண்ட வரலாறு கொண்டவை என்று கூறிய விஜயதாச ராஜபக்ச, இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழலை மேற்கொள்ள சுவிட்சர்லாந்தின் உதவியை கோரினார்.
அவருக்கு பதிலளித்த சுவிஸ் தூதரான Dominik Furgler, இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கை அவற்றை மேற்கொள்வதற்கு தன்னாலான உதவிகளை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
Post a Comment