Header Ads



மக்களுக்கு உதவும் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம்


 கொழும்பு வோட் பிளேஸ் மற்றும் விஜேராம மாவத்தை ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப வரிசைகளில் நின்ற மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம சிற்றுண்டி மற்றும் தேனீரை வழங்கியுள்ளார்.

சமூக உணவு பகிர்வு அணியினருடன் இணைந்து எரிபொருள் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு நேற்று மாலை பனிஸ் மற்றும் தேனீர் வழங்கியதாக ரொஷான் மஹாநாம தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


1 comment:

  1. ரோஷான் மஹாநாமவுக்கு எமது இதயங் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இது போன்ற புண்ணிய கைங்கரியங்களை ஏனையவர்களும் செய்வதற்கு முன்வர வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.