Header Ads



அரசியலமைப்புக்கு விரோதமாக தம்மிக்க தேசியப்பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ளார் - உயர் நிதிமன்றில் மனு


தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டுள்ளமைக்கு எதிராக உயர் நிதிமன்றில் அடிப்படை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

அரசியலமைப்பின் 99 ஏ பிரிவின் படி அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரையே தேசியப்பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யமுடியும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பேரேரா பெயரிடப்பட்டுள்ளமை அரசியலமைப்புக்கு முரனானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.