Header Ads



ஜனாதிபதியின் கூட்டத்தில் காணாமல் போன ஹரீன், பிரதமரின் கூட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டார் - அதிகார மோதல் தீவிரம்


சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளாத அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, பிரதமர் நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதே விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன் பின்னர் இருவரும் பரஸ்பர ஆலோசனை மற்றும் உத்தரவுகளை பிறப்பிப்பார்கள் எனவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள போதிலும், பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து செயற்படுவதற்கு பதிலாக அதிகார மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே துறை தொடர்பான பிரச்சினைகளைப் பேசுவதற்குப் பதிலாக, ஒரே துறையை சேர்ந்த அதிகாரிகளை இருவேறு சந்தர்ப்பங்களில் வரவழைக்கப்படுகிறார்கள். இது முழு நேர விரயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

விவசாயம் மற்றும் சுற்றுலா துறைகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு தடவைகள் தனித்தனியாக கூட்டங்களை கூட்டியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை பிரதமரால் சுற்றுலாத் துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு அதிலுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய நிலையில் மீண்டும் அதே அதிகாரிகளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அழைத்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.


No comments

Powered by Blogger.