Header Ads



ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து மற்றுமொருவர் அவுட்டாகிறார்


ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் பதவி விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில வாரங்களில் அவர் பதவி விலகுவார் என்றும், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை எம்.பி பதவியை இராஜினாமா செய்திருந்தாலும் அரசியலில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைத் தவிர வேறு ராஜபக்ஷர்கள் அமைச்சரவையில் இல்லை எனவும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில்லை என்றும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த சமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.