Header Ads



ஹரீனின் சவாலை, சஜித் ஏற்றுக்கொள்வாரா..?


ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, எதிர்கட்சி தலைவர் சஜித்துக்கு் பகிரங்க சவால் விடுத்துள்ளார். மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் அறிவித்திருந்தார்.

நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச, அவ்வாறு எரிபொருளை கொள்வனவு செய்தால், அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதற்கு தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாகவும் அமைச்சர் ஹரீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

காவியன்

No comments

Powered by Blogger.