எரிபொருள் நிலைய உரிமையாளரின் தாராள மனசு, சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படங்கள்
எரிபொருள் வரும் வரை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் உணவளித்துள்ளார்.
ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரே இவ்வாறு உணவளித்தவர் ஆவர்.
ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்திருந்த மக்களுக்கு நீண்ட நேரமாகியும் எரிபொருள் வழங்க முடியாத நிலை காணப்பட்டதால் குறித்த உணவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
உரிமையாளரின் இச்செயல் சமூக ஊடகங்களில் பாராட்டுக்குள்ளாகி வருகின்றது.
Post a Comment