போதைப்பொருள் பாவனை, விற்பனையை கட்டுப்படுத்த புத்தளத்தில் பாரிய வேலைத் திட்டம் ஆரம்பம்
(இர்ஷாத் ரஹமதுல்லா )
போதைப்பொருள் பாவனை தற்போது நாட்டிலும் எமது நகரிலும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் இவ்வேளை போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத் திட்டமொன்று புத்தளத்தில் முக்கூட்டுத்தலைமைகளால் முன்னெடுக்கப்படுகின்றது.
வீடுகள் தோறும் குடும்பங்களைச் சீரழித்து, வருமானத்தை பாழ்படுத்தி, எதிர்கால சந்ததிகளை நிரந்தர நோயாளிகளாக மாற்றி வரும் போதைப் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக புத்தளத்தின் முக்கூட்டு தலைமைகளான புத்தளம் நகர சபை, பெரிய பள்ளி, ஜம்இய்யத்துல் உலமா ஆகியவற்றுடன் பாதுகாப்பு தரப்புக்களும் சமூக அமைப்புக்களும் ஒன்றிணைந்து இவ் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
அதனடிப்படையில் இவ்விடயம் சம்பந்தமான விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை புத்தளம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது சர்வமத தலைவர்களின் விசேட உரை இடம்பெற்றது.
புத்தளம் நகர சபை தலைவர் எம். எஸ். எம். ரபீக், உறுப்பினர்கள் மற்றும் அரச துறையாளர்கள், பொது மக்கள் என பெரும் எண்ணிக்கைலானவர்கள் கலந்துகொண்டனர்.
Post a Comment