Header Ads



கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு செல்லும் வீதியில் கைக்குண்டு


Ismathul Rahuman
   
   நீர்கொழும்பு நகர பிதாவின் வீட்டிற்கு அருகாமையில் கைகுண்டு ஒன்று இன்று 16 ம் திகதி காலை 9.45 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

    பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய வீதியில் நகரபிதா தயான் லான்சாவின் வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் வீதியோரத்தில் இக் கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    விசேட அதிரடிப் படையின் குண்டு செயல் இழக்கும் பிரிவினரும்,விமானப் படையினரும்,பொலிஸாரும் இனைந்து  பரிசோதணை நடாத்தினர். 

பின்னர் குண்டை செயல் இழப்பதற்காக   நீர்கொழும்பு நீதிமன்றின் உத்தரவை பெற்று குண்டை செயல் இழப்பதற்காக விசேட அதிரடிப் படையினர் எடுத்துச் சென்றனர்.



No comments

Powered by Blogger.