ரணிலின் வீட்டுக்கு முன்பாக, நாளை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு 5 ஆவது ஒழுங்கை இல்லத்திற்கு முன்பாக ஐக்கிய மகளிர் சக்தியால் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
இதன் பிரகாரம் மேற்குறித்த ஆர்ப்பாட்டம் நாளை (22) காலை 9 மணிக்கு பிரதமர் இல்லத்திற்கு முன்னால் இடம் பெறும் எனவும் தெரிவித்தார்
Post a Comment