மீண்டும் றிஸ்வி முப்தி தலைவராகத் தெரிவு
அகில இலங்கை ஜம்மியத்துல உலமா சபைத் தலைவராக மீண்டும் றிஸ்வி முப்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மியத்துல் உலமா சபை நிர்வாகத் தெரிவு இன்று சனிக்கிழமை, 18 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், இரகசிய வாக்கெடுப்பின் மூலம் றிஸ்வி முப்தி தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சமூக மட்டத்தில் ஜம்மியத்துல் உலமா தலைவராக றிஸ்வி முப்தியைத் தவிர, வேறு ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற அபிப்பிராயம் நிலவியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment