Header Ads



முதலை தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் ஜனாஸா மீட்பு (வீடியோ)


புல் வெட்டுவதற்காக சென்ற குடும்பஸ்தரை முதலை  தாக்கியதில்  உயிர் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் கடந்த திங்கட்கிழமை(30)  காலை தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்  55 வயதுடைய நிந்தவூர் 09 ஆம் பிரிவைச் சேர்ந்த அப்துல் மஜீட் ஹூசைன் என்பவராவார்.உயிரிழந்தவரின் சடலம் மறுநாளான செவ்வாய்க்கிழமை(31)  காலை  முதலை  தாக்குதலுக்குள்ளான நிலையில் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தது.

 - பாறுக் ஷிஹான் -


No comments

Powered by Blogger.