Header Ads



"என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகவும் முட்டாள்தனமான முடிவு"


”அரசியலில் பிரவேசித்தது தான் எடுத்த மிகவும் முட்டாள்தனமான முடிவு” என முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் அரசியல் களத்தில் பிரவேசித்திருக்க வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

"என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகவும் முட்டாள்தனமான முடிவு என்று நான் கருதுகிறேன். அத்தகைய முடிவுக்காக நான் வருத்தப்படுகிறேன். இனி அரசியலுக்கு வரமாட்டேன். என்னைப் போன்றவர்களுக்கு இது பொருந்தாது" என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து எதையும் பெறுவதை விட 2011 உலகக் கோப்பையைத் தவறவிட்டது போன்ற வாய்ப்புகளை மட்டுமே இழந்தேன் என்று ஜயசூர்யா மேலும் தெரிவித்துள்ளார்.

சனத் ஜயசூரிய 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் மாத்தறையில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு வந்தவர் ஆவார்.

தற்போது ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி நிலையில், மக்கள் படும் இன்னல்கள் குறித்து ஜனாதிபதியை சனத் ஜயசூரிய கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Tw

No comments

Powered by Blogger.