Header Ads



மே 9 வன்முறைச் சம்பவம் - இதுவரை 2,252 பேர் கைது


கடந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக இதுவரை 2,252 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவர்களில் 1,010 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நிட்டம்புவ பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக இதுவரையில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.