Header Ads



70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை


தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

30 நாட்களுக்கு முன்னரே முற்பதிவு செய்த போதிலும், போதியளவு எரிபொருள் இன்னும் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் W.S.S. பெர்னாண்டோ தெரிவித்தார்.

அமைச்சரின் கூற்றுக்கிணங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே எரிபொருள் கிடைக்கும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுதொகை எரிபொருளே விநியோகிக்கப்பட்டுள்ளதால், 20 வீதமானோருக்கேனும் எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லாததால், இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மோதல்கள் இடம்பெறுவதால், 24 மணித்தியாலங்களும் பாதுகாப்பு போடப்படுவது அவசியம் எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.